என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
புதுப்பேட்டை அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
புதுப்பேட்டை அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுப்பேட்டை:
புதுப்பேட்டை அருகே ஏரிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் புதுப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் ஏரிப்பாளையத்தில் உள்ள மளிகைக்கடைக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அந்த கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகைக்கடை உரிமையாளர் ஆனத்தூரை சேர்ந்த புஷ்பபிருகம் (வயது 29) என்பவரை கைது செய்தனர். மேலும் கடையில் இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story