search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    ஸ்ரீபெரும்புதூரில் லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்- தனியார் கம்பெனி காவலாளி பலி

    ஸ்ரீபெரும்புதூர் அருகே விபத்தில் தனியார் கம்பெனி காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 60). இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் உள்ள சிப்-காட்டில் தனியார் கம்பனியில் காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் ஏழுமலை மற்றும் அதே கம்பனியில் வேலை செய்யும் சகஊழியரான திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை சேர்ந்த சுரேஷ் (42), ஆகிய இருவரும் ஸ்ரீபெரும்புதூர் சிப்-காட் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    மோட்டார் சைக்கிளை சுரேஷ் ஓட்டி சென்றார். அப்போது சாலையில் நின்று இருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஏழுமலை தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    சுரேஷ் பலத்த காயம் அடைந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சுரேசை மீட்டு, ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிக்சைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான ஏழுமலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    Next Story
    ×