search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    காஞ்சிபுரத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 353 பேர் பலி

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 353 ஆக உள்ளது.
    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட 36 வயதுடைய ஆண் உள்பட மாவட்டத்தில் நேற்று 148 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 957 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 22 ஆயிரத்து 754 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 353 ஆக உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 207 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 35 ஆயிரத்து 342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 33 ஆயிரத்து 284 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் 595 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் 272 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆயிரத்து 148 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 37 ஆயிரத்து 504 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 612 ஆக உயர்ந்தது.
    Next Story
    ×