என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோட்டார்சைக்கிள்கள் மோதல்- கல்லூரி மாணவர் பலி
Byமாலை மலர்14 Oct 2020 10:05 AM GMT (Updated: 14 Oct 2020 10:05 AM GMT)
மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
குருபரப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள பல்லேரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். விவசாயி. இவருடைய மகன் வசந்தகுமார் (வயது 22). இவர் குருபரப்பள்ளி அருகே உள்ள தனியார் கலைக்கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி இவர் மோட்டார்சைக்கிளில் குந்தாரப்பள்ளியில் இருந்து பல்லேரிப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, எதிரே வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த வசந்தகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் வசந்தகுமார் இறந்தார். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள பல்லேரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். விவசாயி. இவருடைய மகன் வசந்தகுமார் (வயது 22). இவர் குருபரப்பள்ளி அருகே உள்ள தனியார் கலைக்கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி இவர் மோட்டார்சைக்கிளில் குந்தாரப்பள்ளியில் இருந்து பல்லேரிப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, எதிரே வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த வசந்தகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் வசந்தகுமார் இறந்தார். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X