search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    ஓட்டலில் இருந்த 2 கியாஸ் சிலிண்டர்கள் திருட்டு

    ஓட்டலில் இருந்த 2 கியாஸ் சிலிண்டர்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மதுரை:

    மதுரை ஆரப்பாளையம் ஏ.ஏ.ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிமாறன்(வயது 29), அந்த பகுதியில் ஓட்டல் வைத்திருக்கிறார். சம்பவத்தன்று இவர் இரவு வியாபாரம் முடிந்து ஓட்டலை மூடி விட்டு மறுநாள் காலை வந்தார். அப்போது கதவை திறந்து உள்ளே சென்ற போது அங்கு வைத்திருந்த 2 கியாஸ் சிலிண்டர்களை காணவில்லை. மர்மநபர்கள் அதனை திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து அவர் கரிமேடு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×