என் மலர்
செய்திகள்

திருட்டு
ஓட்டலில் இருந்த 2 கியாஸ் சிலிண்டர்கள் திருட்டு
ஓட்டலில் இருந்த 2 கியாஸ் சிலிண்டர்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை ஆரப்பாளையம் ஏ.ஏ.ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிமாறன்(வயது 29), அந்த பகுதியில் ஓட்டல் வைத்திருக்கிறார். சம்பவத்தன்று இவர் இரவு வியாபாரம் முடிந்து ஓட்டலை மூடி விட்டு மறுநாள் காலை வந்தார். அப்போது கதவை திறந்து உள்ளே சென்ற போது அங்கு வைத்திருந்த 2 கியாஸ் சிலிண்டர்களை காணவில்லை. மர்மநபர்கள் அதனை திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து அவர் கரிமேடு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை ஆரப்பாளையம் ஏ.ஏ.ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிமாறன்(வயது 29), அந்த பகுதியில் ஓட்டல் வைத்திருக்கிறார். சம்பவத்தன்று இவர் இரவு வியாபாரம் முடிந்து ஓட்டலை மூடி விட்டு மறுநாள் காலை வந்தார். அப்போது கதவை திறந்து உள்ளே சென்ற போது அங்கு வைத்திருந்த 2 கியாஸ் சிலிண்டர்களை காணவில்லை. மர்மநபர்கள் அதனை திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து அவர் கரிமேடு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story