search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முககவசம் வழங்கப்பட்டது
    X
    முககவசம் வழங்கப்பட்டது

    பஸ் பயணிகளுக்கு முககவசம்

    ஆலங்குடி காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட சம்பட்டிவிடுதியில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    ஆலங்குடி:

    ஆலங்குடி காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட சம்பட்டிவிடுதியில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா தலைமை வகித்தார். அப்போது அவர் கூறுகையில், பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வீட்டிற்கு சென்றவுடன் கைகளை சோப்பு மூலமாகமோ, கிருமி நாசினி மூலமாகவோ நன்றாக கழுவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், சம்பட்டிவிடுதி வழியாகச் சென்ற பஸ்களை நிறுத்தி அதில் முககவசம் அணியாமல் சென்ற பயணிகளுக்கு இலவசமாக முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    Next Story
    ×