search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்- முதலமைச்சர்

    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள சூழலில் முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் அவர் கூறியதாவது:

    * தமிழகத்தில் போதிய அளவு மழை பெய்து வருவதால் உணவுப்பொருள் உற்பத்தி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    * வடகிழக்கு பருவமழை காலத்தில் பாதிப்புகளை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    * புயல் வீசும்போது மரங்கள் கீழே விழுந்தால் அவற்றை அகற்ற உபகரணங்கள் தயாராக உள்ளன.

    * புயல் காலத்தில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்ல மீட்புப்படையினர் தயாராக உள்ளனர்.

    * பொதுமுடக்கம் அமலில் இருந்தாலும் 90% தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

    * தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் கொரோனா பரவல் குறைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×