என் மலர்
செய்திகள்

கைது
பெரம்பலூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
பெரம்பலூர் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது எசனை ஏரிக்கரை அருகே மறைந்து இருந்து கஞ்சா விற்ற பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு சாமியப்பா நகர் 4-வது தெருவை சேர்ந்த சுரேஷ் (வயது 39), எசனை காட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காமராஜ் மகன் கவியரசு (22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தலா 10 கிராம் பொட்டலம் வீதம் 30 கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story