search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சேலம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

    சேலம் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜகணபதி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் எருமாபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்த ரவுடியான வெள்ளையப்பன் (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர். 

    அவரிடம் இருந்து ரூ.6 ஆயிரம் மதிப்பிலான 600 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் சேலம் செவ்வாய்பேட்டை போலீசார் கபிலர் தெரு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்றுக்கொண்டிருந்த குகை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (21) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×