என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மயிலாடுதுறை அருகே கஞ்சா விற்றவர் கைது

    மயிலாடுதுறை அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை ரெயில்வே கிட்டப்பா பாலம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மயிலாடுதுறை தீப்பாய்ந்த அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்குமார் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து ¼ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×