என் மலர்tooltip icon

    செய்திகள்

    முககவசம்
    X
    முககவசம்

    முககவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.6 ஆயிரம் அபராதம் வசூல்

    கொடுமுடியில் முககவசம் அணியாமல் வந்த 30 பேரிடம் இருந்து தலா ரூ.200 என மொத்தம் ரூ.6 ஆயிரத்தை போலீசார் அபராதமாக வசூலித்தனர்.
    கொடுமுடி:

    கொடுமுடி புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், பரமேஸ்வரன் ஆகியோர் கடந்த 2 நாட்களாக வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக முககவசம் அணியாமல் வந்த 30 பேரிடம் இருந்து தலா ரூ.200 என மொத்தம் ரூ.6 ஆயிரத்தை போலீசார் அபராதமாக வசூலித்தனர்.
    Next Story
    ×