என் மலர்
செய்திகள்

போராட்டம்
திட்டச்சேரி அருகே மாசுபட்ட நீரை பூமிக்கு அடியில் விடுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு
திட்டச்சேரி அருகே மாசுபட்ட நீரை பூமிக்கு அடியில் விடுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்
திட்டச்சேரி:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மூலம் 100-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் கோபுராஜபுரம் ஊராட்சியில் உள்ள என்.ஆர்.எம்.36 ஓ.என்.ஜி.சி., ஆழ்குழாய் கிணற்றில் டேங்கர் லாரி மூலம் கடல் நீரை விட 100 மடங்கு உப்புத்தன்மை அதிகம் கொண்ட மாசு கலந்த நீரை விடுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சிறை பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறையினர் முன்னிலையில் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் மாசு கலந்த நீரை விடுவதால் இந்த பகுதியில் குடிநீர் ஆதாரம் கெட்டு உப்பு நீராக மாறி விடும் என அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதில் கோபுராஜபுரம் ஊராட்சியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் மாசு கலந்த நீரை இறக்குவதில்லை என்றும், அந்த பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு வார காலத்திற்குள் 1,000 அடியில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்குவதாகவும், திட்டச்சேரி- கோபுராஜபுரம் சாலையில் உள்ள பிராவடையான் ஆற்றின் குறுக்கே பழுதடைந்துள்ள பாலத்திற்கு மாற்றாக புதிய பாலம் கட்டி தருவதாக உறுதியளித்தனர்.
அதன்பேரில் அந்த பகுதி பொதுமக்கள் அந்த டேங்கர் லாரியை வெளியே செல்ல அனுமதித்தனர். இதில் ஓ.என்.ஜி.சி. (ஜி.ஜி.எஸ்.) தலைமை பொறுப்பாளர் ராமசாமி, ரிக் பொறுப்பாளர் காரல்மார்க்ஸ் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
Next Story






