என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செல்போன் பார்த்ததை கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்10 Oct 2020 8:19 AM GMT (Updated: 10 Oct 2020 8:19 AM GMT)
சேலத்தில், செல்போன் பார்த்ததை கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை தியாகி நடேசன் தெருவை சேர்ந்தவர் பழனிவேலு. இவருடைய மனைவி ஜெயா. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் கடைசி மகளான கலைவாணி (வயது 17) என்பவர் நஞ்சம்பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பழனிவேலு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். ஜெயா துணிகள் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ஆன்லைன் வகுப்பு நடப்பதால் கலைவாணிக்கு அவருடைய பெரியப்பா பாலசுப்பிரமணி செல்போன் ஒன்று வாங்கி கொடுத்தார். ஆனால் கலைவாணி, ஆன்லைன் வகுப்புகளை தவிர பிற நேரங்களிலும் செல்போனில் வாட்ஸ் அப்பில் பதிவிடுதல், பேசுதல் உள்ளிட்டவைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை வீட்டில் உள்ளவர்கள் கண்டித்தனர்.
இதனால் மனமுடைந்த கலைவாணி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் கலைவாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியின் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X