search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வேலை கிடைக்காததால் விரக்தி: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

    புதுவையில் வேலை கிடைக்காததால் விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை நைனார்மண்டபம் கிழக்கு வாசல் நகரை சேர்ந்தவர் அண்ணாமலை. புதுவை அரசு அச்சகத்தில் பணியாற்றினார். இவர் கடந்த சில ஆண்டுகள் முன்பு இறந்து விட்டார். இவரது மகன் கருணாகரன் (வயது 30). தந்தையின் வேலை கேட்டு முயற்சித்து வந்தார். இவருடன் அவரது தாயார் பத்மாவதி வசித்து வந்தார்.

    இந்த நிலையில் தந்தையின் வேலை கிடைக்காததால் விரக்தியில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கருணாகரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல் மண்ணாடிப்பட்டு தென்னஞ்சாலை வீதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 54). தொழிலாளி. இவர் நேற்று காலை வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×