என் மலர்
செய்திகள்

தற்கொலை தடுப்பு ஆலோசனை
ஈரோட்டில் தற்கொலை தடுப்பு ஆலோசனை மையம்- போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
ஈரோட்டில் தற்கொலை தடுப்பு ஆலோசனை மையத்தை போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
ஈரோடு:
ஈரோட்டில் தற்கொலை தடுப்பு ஆலோசனை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. ஈரோட்டில் உள்ள தன்னார்வ தொண்டு அமைப்புகள் மற்றும் மாவட்ட காவல்துறை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆகியவை இணைந்து ஈரோட்டில் இந்த மையத்தை தொடங்க உள்ளனர். இதன் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை கலந்து கொண்டு தற்கொலை தடுப்பு ஆலோசனை மையத்தை திறந்து வைத்தார்.
அவர் பேசும்போது, ‘மாணவ- மாணவிகளுக்கு தேர்வு அச்சத்தை போக்கவும், எதிர்காலம் குறித்த நேர்மறையான நம்பிக்கை ஏற்படுத்தவும் வேண்டும். இதற்காக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தொலைபேசி சேவை பெறப்பட்டு, அந்த எண்கள் அனைத்து பகுதிகளிலும் சுவரொட்டிகள் மூலம் விளம்பரப்படுத்தப்படும்‘ என்றார்.
ஈரோட்டில் தற்கொலை தடுப்பு ஆலோசனை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. ஈரோட்டில் உள்ள தன்னார்வ தொண்டு அமைப்புகள் மற்றும் மாவட்ட காவல்துறை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆகியவை இணைந்து ஈரோட்டில் இந்த மையத்தை தொடங்க உள்ளனர். இதன் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை கலந்து கொண்டு தற்கொலை தடுப்பு ஆலோசனை மையத்தை திறந்து வைத்தார்.
அவர் பேசும்போது, ‘மாணவ- மாணவிகளுக்கு தேர்வு அச்சத்தை போக்கவும், எதிர்காலம் குறித்த நேர்மறையான நம்பிக்கை ஏற்படுத்தவும் வேண்டும். இதற்காக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தொலைபேசி சேவை பெறப்பட்டு, அந்த எண்கள் அனைத்து பகுதிகளிலும் சுவரொட்டிகள் மூலம் விளம்பரப்படுத்தப்படும்‘ என்றார்.
Next Story






