என் மலர்
செய்திகள்

விபத்து பலி
புவனகிரி அருகே வாகனம் மோதி மூதாட்டி பலி
புவனகிரி அருகே வாகனம் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிஞ்சிப்பாடி:
புவனகிரி அருகே பெரியபட்டு மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் பாக்கியசாமி (வயது 48). இவர் தனது தாயார் மரிய கண்ணுவுடன் (70) உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெத்தநாயக்கன்குப்பத்துக்கு சென்றார். அங்கு நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டுக்கு செல்ல பெத்தநாயக்கன்குப்பம் பஸ் நிறுத்தத்துக்கு மரியகண்ணு மட்டும் சென்றார். அங்கு பெரியபட்டுக்கு செல்லும் பஸ் சென்றுவிட்டதால், மீண்டும் உறவினர் வீட்டுக்கு அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மரியகண்ணு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புவனகிரி அருகே பெரியபட்டு மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் பாக்கியசாமி (வயது 48). இவர் தனது தாயார் மரிய கண்ணுவுடன் (70) உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெத்தநாயக்கன்குப்பத்துக்கு சென்றார். அங்கு நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டுக்கு செல்ல பெத்தநாயக்கன்குப்பம் பஸ் நிறுத்தத்துக்கு மரியகண்ணு மட்டும் சென்றார். அங்கு பெரியபட்டுக்கு செல்லும் பஸ் சென்றுவிட்டதால், மீண்டும் உறவினர் வீட்டுக்கு அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மரியகண்ணு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






