என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா கூடுதல் சிகிச்சை மையங்களில் நோயாளிகள் இல்லை
Byமாலை மலர்7 Oct 2020 9:36 AM GMT (Updated: 7 Oct 2020 9:36 AM GMT)
கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் கூடுதல் சிகிச்சை மையங்களில் நோயாளிகள் ‘அட்மிஷன்‘ இல்லாமல் அரசு மருத்துவமனையில் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.
புதுக்கோட்டை:
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆண்டி முதல் அரசன் வரை தாக்கி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தொற்று பாதிப்பு பரவலாக இருந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்பு இருந்ததை விட தற்போது தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளன.
தினமும் சராசரியாக 3 இலக்க எண்களில் கொரோனா தொற்று பாதிப்பு இருந்து வந்தது. ஆனால் தற்போது இரட்டை இலக்க எண்களில் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது. மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த போது கூடுதல் படுக்கை வசதிகள் ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டன. புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி, அரசு கல்வியியல் கல்லூரி வளாகத்திலும், மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா சிறப்பு சிகிச்சை வசதி ஏற்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் தற்போது தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் ராணியார் அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் உள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையம், அறந்தாங்கி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் மட்டும் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றன. கூடுதலாக அமைக்கப்பட்ட சிறப்பு சிகிச்சை மையங்களில் தற்போது ‘அட்மிஷன்‘ இல்லை. நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.
மேலும் ஒரிரு நோயாளிகளுக்காக டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நியமிக்கப்படுவதை தவிர்க்கவும் தற்போது ‘அட்மிஷன்‘ போடுவதில்லை. மாறாக ராணியார் மருத்துவமனையிலும், அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள சிறப்பு சிகிச்சை மையத்திலும் போதுமான படுக்கை மற்றும் சிகிச்சை வசதிகள் இருப்பதால் நோயாளிகள் அனைவரும் அங்கு அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்கு பின் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X