என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அன்னவாசல் அருகே மணல் கடத்த முயன்ற 2 பேர் கைது
Byமாலை மலர்5 Oct 2020 10:02 AM GMT (Updated: 5 Oct 2020 10:02 AM GMT)
அன்னவாசல் அருகே மணல் கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னவாசல்:
அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலை பகுதியில் இருந்து மணல் கடத்தி செல்லப்படுவதாக அன்னவாசல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து குடுமியான்மலை அருகே உள்ள விசலிக்குளம் பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பொக்லைன் எந்திரம் மூலம் மணலை அள்ளி டிராக்டர் டிப்பரில் சிலர் கடத்த முயன்றது தெரிய வந்தது.
அதன்பேரில், பரம்பூர் வண்ணாரப்பட்டியை சேர்ந்த சரவணன் (வயது 30) மற்றும் காரையூர் சாத்தனூரை சேர்ந்த சின்னப்பா (40) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல, அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வம்பரம்பட்டி பாம்பாறு பாலம் பகுதியில் கே.புதுப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மொபட்டில் சாக்கு மூட்டைகளில் மணல் கடத்தி வந்த சரவணனிடம்(22) விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X