search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் முகக்கவசம் அணியாத 3 சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கொரோனா தொற்றை பரப்பும் வகையில் முகக்கவசம் அணியாமல் இருந்த சுற்றுலா பயணிகள் 3 பேருக்கு தலா ரூ.200 என மொத்தம் ரூ.600 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
    ஊட்டி:

    ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை பூங்காக்கள் திறக்கப்பட்டது. அங்கு சுற்றுலா பயணிகளுக்கு காய்ச்சல் உள்ளதா? என்று தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். பூங்காவில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதை மீறினால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

    பணியாளர்கள் சுற்றுலா பயணிகள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கிறார்களா? என்று கண்காணித்து வருகின்றனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கொரோனா தொற்றை பரப்பும் வகையில் முகக்கவசம் அணியாமல் இருந்த சுற்றுலா பயணிகள் 3 பேருக்கு தலா ரூ.200 என மொத்தம் ரூ.600 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
    Next Story
    ×