என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புகையிலை- பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
Byமாலை மலர்4 Oct 2020 4:37 AM GMT (Updated: 4 Oct 2020 4:37 AM GMT)
புகையிலை- பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்கவட்டாங்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உணவு பொருள் தயாரித்து விற்பனை செய்யும் கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கடைகளில் கொரோனா நேரங்களில் சரியான முறையில் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து விற்பனை செய்கிறார்களா? என்பது குறித்து மாவட்ட கலெக்டரின் உத்தரவின்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நடராஜன் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவற்றை விற்பனை செய்து வந்த 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற ஆய்வு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெறும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தெரிவித்தார். ஆய்வின்போது திருமானூர் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெஸ்டின் அமல்ராஜ் உள்ளிட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X