என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூர் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.க்கு கொரோனா
Byமாலை மலர்28 Sep 2020 6:42 AM GMT (Updated: 28 Sep 2020 6:42 AM GMT)
கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. அருண்மொழிதேவனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திட்டக்குடி:
கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அருண்மொழிதேவன்(வயது 52). கடலூர் நாடாளுமன்ற முன்னாள் எம்.பி.யான இவர், திட்டக்குடி வசதிஷ்டபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல், கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி தொல்லையால் முன்னாள் எம்.பி. அருண்மொழிதேவன் அவதிப்பட்டார். இதையடுத்து சுகாதாரத்துறையினர் நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இந்த பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் முன்னாள் எம்.பி. அருண்மொழிதேவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அவரது வீடு முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X