என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மாமல்லபுரம் அருகே சரக்கு ஆட்டோ தீப்பிடித்தது- 4 வாலிபர்கள் உயிர் தப்பினர்
மாமல்லபுரம்:
மயிலாப்பூரை சேர்ந்தவர் முகிலன். இவர் வீட்டை காலி செய்துவிட்டு சொந்த ஊரான மரக்காணத்தில் குடியேறுவதற்காக வீட்டுப் பொருட்களை எடுத்து செல்லும் வேலையை நங்கநல்லூரில் உள்ள டிரான்ஸ்போட் நிறுவனத்திடம் ஒப்படைத்தார்.
நேற்று இரவு சரக்கு வேனில் அவரது வீட்டில் இருந்த பிரிட்ஜ், வாசிங்மிஷின், ஏர்கூலர், மிக்சி, கிரைன்டர், கட்டில், ஷோபா, பித்தளை பூஜை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை சரத் என்ற டிரைவர் உட்பட 4 வாலிபர்கள் வாகனத்தில் ஏற்றினர்.
பின்னர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மரக்காணம் நோக்கி அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அதிகாலை 3 மணியளவில் மாமல்லபுரம் புறவழிச்சாலை அருகே வந்த போது சரக்கு ஆட்டோவில் தீடிரென தீப்பிடித்தது.
உடனடியாக பூஞ்சேரி டோல்கேட் அருகே வண்டியை நிறுத்தி விட்டு தீயைஅனைக்க முயன்றனர். எனினும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
உடனடியாக டிரைவர் உள்பட 4 வாலிபர்களும் அங்கிருந்து தள்ளி நின்றனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அனைத்தனர்.
எனினும் சரக்கு ஆட்டோவில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. சரக்கு ஆட்டோவில் தீ பற்றியதும், டிரைவர் உள்பட 4 பேரும் இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்