என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தேன்கனிக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    தேன்கனிக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தேன்கனிக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மீது தொடர்ச்சியாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தாக்குதல் நடத்தி வருவதாக கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    இதற்கு வட்ட செயலாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். இதில் மாநில குழு உறுப்பினர் ஆனந்த், அரூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு, மாவட்ட செயலாளர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை தாக்கியவர்களை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேகர், இருதயராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாம்ராஜ், மாவட்ட குழு உறுப்பினர் அனுமப்பா உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    Next Story
    ×