என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
பயணிகள் நிழற்குடையில் தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை
அண்ணாமலைநகர் அருகே பயணிகள் நிழற்குடையில் மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணாமலைநகர்:
சிதம்பரம் அருகே உள்ள மேலக்குண்டலப்பாடி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி ஜெயம் (வயது 70). இவருடைய கணவர் இறந்துவிட்டார். இதையடுத்து ஜெயம் தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சிதம்பரம் புறவழிச்சாலை அம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் ஜெயம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குப்பதிவு ஜெயம் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Next Story






