search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    கொரோனா பரிசோதனை முகாம்

    காமேஸ்வரம் ஊராட்சியில் திருப்பூண்டி வட்டார பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.
    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த காமேஸ்வரம் ஊராட்சியில் திருப்பூண்டி வட்டார பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. முகாமில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் உள்பட 125 பேர் கலந்து கொண்டனர். முகாமில் கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதில் கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், வட்டார மருத்துவ அலுவலர் அருண்பதி, ஊராட்சி தலைவர் ஜெய்சுதா, ஒன்றியக்குழு துணை தலைவர் சவுரிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×