என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராணுவ கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்
Byமாலை மலர்19 Sep 2020 10:24 AM GMT (Updated: 19 Sep 2020 10:24 AM GMT)
ராணுவ கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தகவல் தெரிவித்துள்ளார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் 2020-ம் ஆண்டில் ஜூலை மாதம் 8-ம் வகுப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக ஏழாம் வகுப்பு படிக்கின்ற அல்லது தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேரலாம். 11 முதல் 13 வயது வரை அதாவது 2.7.2008-க்கு முன்னதாகவும் 1.7.2009-க்கு பிறகு பிறந்து இருக்கக்கூடாது. இதற்கான விண்ணப்பத்தினை கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி என்ற பெயரில் பொதுப்பிரிவினர் ரூ.600-ம், எஸ்.சி., எஸ்.டி. இனத்தவர் ரூ.555-க்கும் காசோலை எடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பத்துடன் மாதிரி வினாத்தாள்களும் அனுப்பி வைக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் விரைவு தபாலில் சென்னை டி. என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்கு வருகிற 30-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். பின்னர் விண்ணப்பதாரர்களுக்கு வருகிற டிசம்பர் மாதம் 1, 2-ந் தேதி நுழைவுத் தேர்வுகள் நடைபெறும். பின்னர் 6.4.2021 அன்று வாய்மொழித் தேர்வு நடைபெறும். மேலும் விபரங்களுக்கு www.rimc.org என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களின் 7-ம் வகுப்பு பயிலும் மற்றும் முடித்த சிறார்கள் எச்சரிக்கைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் 2020-ம் ஆண்டில் ஜூலை மாதம் 8-ம் வகுப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக ஏழாம் வகுப்பு படிக்கின்ற அல்லது தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேரலாம். 11 முதல் 13 வயது வரை அதாவது 2.7.2008-க்கு முன்னதாகவும் 1.7.2009-க்கு பிறகு பிறந்து இருக்கக்கூடாது. இதற்கான விண்ணப்பத்தினை கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி என்ற பெயரில் பொதுப்பிரிவினர் ரூ.600-ம், எஸ்.சி., எஸ்.டி. இனத்தவர் ரூ.555-க்கும் காசோலை எடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பத்துடன் மாதிரி வினாத்தாள்களும் அனுப்பி வைக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் விரைவு தபாலில் சென்னை டி. என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்கு வருகிற 30-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். பின்னர் விண்ணப்பதாரர்களுக்கு வருகிற டிசம்பர் மாதம் 1, 2-ந் தேதி நுழைவுத் தேர்வுகள் நடைபெறும். பின்னர் 6.4.2021 அன்று வாய்மொழித் தேர்வு நடைபெறும். மேலும் விபரங்களுக்கு www.rimc.org என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களின் 7-ம் வகுப்பு பயிலும் மற்றும் முடித்த சிறார்கள் எச்சரிக்கைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X