என் மலர்
செய்திகள்

ஆண் பிணம்
பக்கிங்காம் கால்வாயில் ஆண் பிணம்
பக்கிங்காம் கால்வாயில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை பக்கிங்காம் கால்வாயில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






