search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    அரியலூர் மாவட்டத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று

    அரியலூர் மாவட்டத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3, 343 ஆக உயர்ந்துள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் நேற்று 27 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 7 பேருக்கும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 5 பேருக்கும், திருமானூர், செந்துறை ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் தலா 2 பேருக்கும், தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் தலா ஒருவருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3 பேருக்கும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 6 பேருக்கும் என மொத்தம் 27 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3, 343 ஆக உயர்ந்துள்ளது. 

    2,470 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஏற்கனவே மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு 37 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது 836 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 344 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
    Next Story
    ×