search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    தாண்டவன்குளம் ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம்

    நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் ஊராட்சியில் வட்டார சுகாதார துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    கொள்ளிடம்:

    நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் ஊராட்சியில் வட்டார சுகாதார துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் பபிதா தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் வாசுதேவன் வரவேற்றார். கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சன் முகாமை தொடங்கி வைத்து பேசுகையில், அனைவரும் எந்த நேரமும் தவறாமல் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். சளி, இருமல் ஆகியவை இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார். ஊராட்சி மன்ற துணை தலைவர் சந்திரசேகர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜாராமன், சுகாதார ஆய்வாளர்கள் சதீஷ்குமார், அன்புராஜி, கிராம செவிலியர் மாலதி மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்து கொண்டனர். முடிவில், ஊராட்சி செயலர் குணசெல்வன் நன்றி கூறினார்.
    Next Story
    ×