என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடம் அருகே சேவல் சூதாட்டம் நடத்திய 4 பேர் கைது
Byமாலை மலர்14 Sep 2020 8:36 AM GMT (Updated: 14 Sep 2020 8:36 AM GMT)
பல்லடம் அருகே சேவல் சூதாட்டம் நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் குட்டையில் சேவல் கட்டு சூதாட்டம் நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அமலதாஸ் தலைமையில் சென்ற போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டபோது ஒரு கும்பல் இவர்களை கண்டதும் தப்பிச்செல்ல முயன்றது.
அவர்களை சுற்றி வளைத்து பிடித்து போலீசார் விசாரித்த போது, அவர்கள் இடுவாயை சேர்ந்த மாரிமுத்து (வயது 32) சின்னாண்டிபாளையத்தை சேர்ந்த முத்துக்கருப்பன் (28), வடுகபாளையத்தை சேர்ந்த கார்த்திக் (29), நீலியைச்சேர்ந்த தேவராஜ் (24), என்பதும் அவர்கள் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது, இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 சேவல்கள் மற்றும் ரூ.1,800 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X