என் மலர்
செய்திகள்

தற்கொலை
சீர்காழி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
சீர்காழி அருகே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சீர்காழி:
சீர்காழி அருகே கோவில்பத்து கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் தாமோதரன்(வயது24). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. நேற்றுமுன்தினம் இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தாமோதரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story