search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபராதம்
    X
    அபராதம்

    முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம்

    நன்னிலம் பகுதியில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
    நன்னிலம்:

    நன்னிலம் பகுதியில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 5 நாட்களாக பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில் அலுவலர்கள் நன்னிலம் பகுதியில் முககவசம் அணியாமல் செல்பவர்களை கண்காணித்து அவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து ரசீது வழங்கி வருகிறார்கள். இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகர் கூறியதாவது:-

    கடந்த 5 தினங்களாக நன்னிலம் பகுதியில் முககவசம் அணியாமல் செல்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ரூ.200அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கான தொகையை பெற்றுக்கொண்டு ரசீது வழங்கி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நன்னிலம் பகுதியில் கடந்த 5 நாட்களில் ரூ.8,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×