search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுத்தை
    X
    சிறுத்தை

    தாளவாடி அருகே சாலையை கடந்து சென்ற சிறுத்தை- வாகன ஓட்டிகள் பீதி

    தாளவாடி அருகே கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளது. இங்கு மான், புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    சிறுத்தை மற்றும் புலி விவசாய தோட்டத்தில் புகுந்து அடு, மாடுகளை கடித்து குதறுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தாளவாடி வனசரகத்திற்கு உட்பட்ட பீம்ராஜ் நகர்,சூசைபுரம், தொட்டகாஜனூர் கிராமத்தை ஒட்டி உள்ள கல்குவாரியில் பதுங்கி உள்ள சிறுத்தை அங்குள்ள ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன் கல்குவாரியில் வனத்துறையினர் வைத்த கண்காணிப்பு கேமிராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானது.

    நேற்று இரவு 9 மணியளவில் தாளவாடியில் இருந்து அருள்வாடிக்கு 2 பேர் காரில் சென்றனர். சூசைபுரம் பிரிவு பகுதியில் சென்ற போது கல்குவாரியில் இருந்து சிறுத்தை சாலையை கடந்து சென்றது.

    இதனால் அவர்கள் பீதி அடைந்தனர். காரை நிறுத்தி சிறுத்தையை தங்களது செல்போனில் படம் பிடித்தனர். கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×