என் மலர்
செய்திகள்

குன்னூரில் கடமான் வேட்டையாடிய 3 வாலிபர்கள் கைது
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூர் வனச் சரகத்தில் சிறுத்தை, புலி, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
வனத்தையொட்டியுள்ள விவசாயத்தோட்டங்களில் வனவிலங்குகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதனால் தேயிலை மற்றும் மலைக்காய்கறி விவசாயிகள் தோட்டங்களுக்கு வேலி அமைத்துள்ளனர். இதில் வனவிலங்குகள் சிக்கி உயிரிழந்து வருகிறது.
இந்நிலையில் இந்த பகுதியில் கடமான் வேட்டையாடப்பட்டதாக குன்னூர் வனச்சரகர் சசிகுமாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட வன அதிகாரிகள் மூப்பர்காடு பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த மருதன் என்பவரின் மகன் மணிகண்டன் (28), கிருஷ்ணன் என்பரின் மகன் விக்னேஷ் (22), சுப்பிரமணி என்பவரின் மகன் ராஜூ (48) ஆகியோரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து வேட்டையாடிய கடமானை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் 3 பேருக்கும் தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ. 75 ஆயிரம் அபராதம் விதித்தனார்.






