என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோட்டார் சைக்கிள்களில் கடத்தி வந்த 330 லிட்டர் சாராயம் பறிமுதல்- 3 பேர் கைது
Byமாலை மலர்10 Sep 2020 9:49 AM GMT (Updated: 10 Sep 2020 9:49 AM GMT)
மோட்டார் சைக்கிள்களில் கடத்தி வந்த 330 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம் பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர், அப்போது போழகுடி பஸ் நிறுத்தம் அருகே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது அதில் சாராயம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்த 110 லிட்டர் சாராயத்தையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராயம் கடத்தி வந்த காரைக்கால் நல்லாத்தூர் பகுதியை சேர்ந்த மாதவன் (வயது 28) என்பவரை கைது செய்தனர்.
இதேபோல் கொல்லுமாங்குடி பஸ் நிறுத்தம் அருகே வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 110 லிட்டர் சாராயம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சாராயத்தையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து, சாராயத்தை கடத்தி வந்த காரைக்கால் நெடுங்காடு பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (21) என்பவரை கைது செய்தனர்.
அதேபோல் கீரனூர் பஸ் நிறுத்தம் அருகே வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்த 110 லிட்டர் சாராயத்தையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கீரனூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (38) என்பவரை கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர், அப்போது போழகுடி பஸ் நிறுத்தம் அருகே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது அதில் சாராயம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்த 110 லிட்டர் சாராயத்தையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராயம் கடத்தி வந்த காரைக்கால் நல்லாத்தூர் பகுதியை சேர்ந்த மாதவன் (வயது 28) என்பவரை கைது செய்தனர்.
இதேபோல் கொல்லுமாங்குடி பஸ் நிறுத்தம் அருகே வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 110 லிட்டர் சாராயம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சாராயத்தையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து, சாராயத்தை கடத்தி வந்த காரைக்கால் நெடுங்காடு பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (21) என்பவரை கைது செய்தனர்.
அதேபோல் கீரனூர் பஸ் நிறுத்தம் அருகே வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்த 110 லிட்டர் சாராயத்தையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கீரனூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (38) என்பவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X