என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குமாரபாளையத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
Byமாலை மலர்10 Sep 2020 9:10 AM GMT (Updated: 10 Sep 2020 9:10 AM GMT)
குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமாரபாளையம்:
சேலம் மாவட்டம் தேவூர் அருகே உள்ள காவேரிபட்டி மணக்காடு கருப்புச்சட்டை கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது 3-வது மகன் நித்தியானந்தம் (வயது 21). பி.சி.ஏ. பட்டதாரி. இவர் கடந்த 1½ ஆண்டுகளாக குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றார். பின்னர் மாலை நித்தியானந்தம் கடையில் மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாகவும் அவரது உடல் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கடையின் உரிமையாளர், வாலிபரின் தந்தை துரைசாமிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து துரைசாமி குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் தனது மகன் மரணம் குறித்து புகார் கொடுத்தார். புகாரின்பேரில் குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X