என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அறந்தாங்கி அருகே இடியுடன் கனமழை- மின்னல் தாக்கி விவசாயி பலி
Byமாலை மலர்10 Sep 2020 6:25 AM GMT (Updated: 10 Sep 2020 6:25 AM GMT)
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இடியுடன் கனமழை பெய்தது. அப்போது திடீரென்று மின்னல் தாக்கியதில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அறந்தாங்கி:
அறந்தாங்கியை அடுத்த மேல்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 75). சொந்தமாக செம்மறி ஆடுகள் வைத்து வளர்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சன்னாசி மனைவி பாப்பு (60). இவரும் ஆடு வளர்க்கிறார்.
நேற்று மதியம் ஆறுமுகமும், பாப்புவும் கருங்குடி கண்மாயில் தங்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திடீரென்று ஆறுமுகம் மீது மின்னல் தாக்கியது. இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே அதிர்ச்சியில் உயிரிழந்தார்.
ஆறுமுகம் நின்ற இடத்தில் இருந்து சற்று தொலைவில் நின்றிருந்த பாப்பு படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் விஜயபுரம் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் மெய்யழகு மனைவி முத்துலெட்சுமி (35). மகள்கள் மகேஸ்வரி (19), மஞ்சுளா (14). நேற்று மதியம் முத்துலெட்சுமி தனது 2 மகள்களுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் மீது மின்னல் தாக்கியது.
இதில் முத்துலெட்சுமி, மகேஸ்வரி, மஞ்சுளா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்தது. படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அறந்தாங்கியை அடுத்த மேல்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 75). சொந்தமாக செம்மறி ஆடுகள் வைத்து வளர்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சன்னாசி மனைவி பாப்பு (60). இவரும் ஆடு வளர்க்கிறார்.
நேற்று மதியம் ஆறுமுகமும், பாப்புவும் கருங்குடி கண்மாயில் தங்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திடீரென்று ஆறுமுகம் மீது மின்னல் தாக்கியது. இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே அதிர்ச்சியில் உயிரிழந்தார்.
ஆறுமுகம் நின்ற இடத்தில் இருந்து சற்று தொலைவில் நின்றிருந்த பாப்பு படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் விஜயபுரம் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் மெய்யழகு மனைவி முத்துலெட்சுமி (35). மகள்கள் மகேஸ்வரி (19), மஞ்சுளா (14). நேற்று மதியம் முத்துலெட்சுமி தனது 2 மகள்களுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் மீது மின்னல் தாக்கியது.
இதில் முத்துலெட்சுமி, மகேஸ்வரி, மஞ்சுளா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்தது. படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X