search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    விருதுநகர் அருகே பாம்பு கடித்து மாணவர் பலி

    விருதுநகர் அருகே பாம்பு கடித்து மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள சின்னப்பரெட்டியபட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 50). இவர் பட்டாசு ஆலை காவலாளியாக உள்ளார். இவரது மகன் காளஸ்வரன் (22). தனியார் பாலிடெக்னிக்கில் படித்து வந்த இவர் நேற்று அதிகாலை வீட்டின் பின்புறம் உள்ள வைக்கோல் படப்பில் வைக்கோல் எடுத்தபோது பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட காளஸ்வரன் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்
    Next Story
    ×