என் மலர்

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    சுங்குவார்சத்திரம் அருகே மின்னல் தாக்கி தொழிலாளி பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சுங்குவார்சத்திரம் அருகே மின்னல் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தை அடுத்த சிறுமங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 35). அந்த கிராமத்தில் சிலரது வீட்டில் உள்ள மாடுகளுக்கு பால்கறந்து கொடுக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று மாலை அந்த பகுதியில் மழை பெய்து வந்தது. அப்போது அதே பகுதியில் உள்ள சுந்தரம் என்பவரின் வீட்டில் மாட்டுக்கு பால் கறந்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கி சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே இறந்தார். கன்று குட்டியும் இறந்தது. இது குறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்திரசேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×