என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    டிராக்டர் மோதி தச்சுத்தொழிலாளி பலி

    புதுக்கோட்டை அருகே டிராக்டர் மோதி தச்சுத்தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரிமளம்:

    புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை அருகே உள்ள வளநாடு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 22). தச்சுத்தொழிலாளியான இவர் வளநாடு கிராமத்தில் இருந்து அவருடைய மொபட்டில் கே.புதுப்பட்டி நோக்கி சென்றார். தாஞ்சூர் அருகே சென்றபோது எதிரே வந்த டிராக்டர் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மணிகண்டனை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிராக்டரை ஓட்டி வந்த தஞ்சாவூர் அருகே உள்ள நாட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த சேதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×