என் மலர்
செய்திகள்

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா
விதிகளை மீறி நிகழ்ச்சிகள் நடத்தினால் அபராதம்- கலெக்டர் எச்சரிக்கை
நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி நிகழ்ச்சிகள் நடத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
ஊட்டி:
ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், தன்னார்வலர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசின் உத்தரவுப்படி நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக சில நாட்களாக ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகின்றது. பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்கள் தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள, அவர்களிடையே தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
அவ்வாறு பரிசோதனைக்கு வரும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முறையான சிகிச்சை அளித்து அவர்களை குணமடைய செய்ய முடியும். நீலகிரியில் 82 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கட்டுப்பாட்டு பகுதிகளில் தொடர்ந்து காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் தெர்மல் ஸ்கிரீனிங், பல்ஸ் ஆக்சிடேஷன் போன்ற பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். சுகாதாரத்துறை அலுவலர்கள் காய்ச்சல் பரிசோதனை பணியில் ஈடுபடும் போது சம்பந்தப்பட்ட அலுவலர்கள், ஊர் தலைவர்கள் உடன் இருந்து அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
கொரோனாவை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்து அரசு பல்வேறு வழிமுறைகளை தெரிவித்து உள்ளது. அதன் அடிப்படையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பூரண குணமடைந்து வீடு திரும்பும் நபர்களின் எண்ணிக்கை நீலகிரி மாவட்டத்தில் அதிகரித்து இருக்கிறது. ஊராட்சி தலைவர்கள் தங்களது கிராமங்களில் உள்ள நபர்கள், தன்னார்வலர்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கான அறிக்கையை தயாரித்து அதற்கேற்றவாறு தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
நகராட்சி மற்றும் கிராம பகுதிகளில் வார்டு வாரியாக காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டு அதிகமான நபர்களுக்கு தொற்று அறிகுறிகள் இருந்தால் அந்த பகுதிகளில் தொடர்ந்து 7 நாட்கள் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட வேண்டும். திருமண நிகழ்ச்சியில் 50 பேர், இறப்பு நிகழ்வில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். இதனை ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊர் தலைவர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியாட்கள் வந்து செல்வதை தவிர்க்க வேண்டும். அரசு விதிகளை மீறி நிகழ்ச்சிகள் நடைபெற்றால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதையும் மீறும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, மகளிர் திட்ட இயக்குனர் பாபு மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், தன்னார்வலர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசின் உத்தரவுப்படி நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக சில நாட்களாக ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகின்றது. பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்கள் தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள, அவர்களிடையே தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
அவ்வாறு பரிசோதனைக்கு வரும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முறையான சிகிச்சை அளித்து அவர்களை குணமடைய செய்ய முடியும். நீலகிரியில் 82 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கட்டுப்பாட்டு பகுதிகளில் தொடர்ந்து காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் தெர்மல் ஸ்கிரீனிங், பல்ஸ் ஆக்சிடேஷன் போன்ற பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். சுகாதாரத்துறை அலுவலர்கள் காய்ச்சல் பரிசோதனை பணியில் ஈடுபடும் போது சம்பந்தப்பட்ட அலுவலர்கள், ஊர் தலைவர்கள் உடன் இருந்து அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
கொரோனாவை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்து அரசு பல்வேறு வழிமுறைகளை தெரிவித்து உள்ளது. அதன் அடிப்படையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பூரண குணமடைந்து வீடு திரும்பும் நபர்களின் எண்ணிக்கை நீலகிரி மாவட்டத்தில் அதிகரித்து இருக்கிறது. ஊராட்சி தலைவர்கள் தங்களது கிராமங்களில் உள்ள நபர்கள், தன்னார்வலர்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கான அறிக்கையை தயாரித்து அதற்கேற்றவாறு தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
நகராட்சி மற்றும் கிராம பகுதிகளில் வார்டு வாரியாக காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டு அதிகமான நபர்களுக்கு தொற்று அறிகுறிகள் இருந்தால் அந்த பகுதிகளில் தொடர்ந்து 7 நாட்கள் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட வேண்டும். திருமண நிகழ்ச்சியில் 50 பேர், இறப்பு நிகழ்வில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். இதனை ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊர் தலைவர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியாட்கள் வந்து செல்வதை தவிர்க்க வேண்டும். அரசு விதிகளை மீறி நிகழ்ச்சிகள் நடைபெற்றால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதையும் மீறும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, மகளிர் திட்ட இயக்குனர் பாபு மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






