என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
கார் டிரைவருக்கு மிரட்டல்: ஊராட்சி துணைத்தலைவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
காரைக்குடி அருகே கார் டிரைவருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக ஊராட்சி துணைத்தலைவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
காரைக்குடி:
காரைக்குடி வைரவபுரம் நேரு நகரில் வசிப்பவர் சேகர். கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வளர்மதி. இவர் சங்கராபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடிநீர் வினியோக பிரிவில் வேலை பார்த்து வருகிறார். சேகர் வீட்டில் இருந்தபோது சங்கராபுரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாண்டியராஜன் சேகருக்கு போன் செய்து உன் மனைவியை அழைத்துக் கொண்டு உடனே அலுவலகத்திற்கு வா என்று கூறியுள்ளார்.
மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சேகர் மட்டும் சென்றுள்ளார். அங்கே பாண்டியராஜன், அவரது நண்பர்கள் கணேசன், ரஞ்சித்குமார், கார்த்திக் ஆகியோர் சேகரை தனியாக அழைத்து சென்றனர். பின்னர் அவரிடம் உன் மனைவி ஒழுங்காக வேலை செய்ய மாட்டாளா என்று கூறி ஆபாசமாக பேசி சாதி பெயரை சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
மேலும் உன் மனைவியை உடனடியாக வேலையை ராஜினாமா செய்வதாக எழுதி கொடுக்க சொல். இல்லையேல் குடும்பத்தோடு தொலைத்து விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம், சங்கராபுரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாண்டியராஜன் மற்றும் அவரது நண்பர்கள் மீது வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story