என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஊரடங்கு உத்தரவை மீறிய 81 பேர் கைது

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி, காரணம் இல்லாமல் சாலையில் சுற்றித்திரிந்த 81 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆகஸ்டு மாதம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் தளர்வில்லா முழு ஊரடங்கை கடைப்பிடிக்க தமிழக அரசு அறிவித்தது. இதனால் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

    மேலும் வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், கடைகள் அடைக்கப்பட்டன. மாவட்டத்தில் தளர்வில்லா ஊரடங்கு உத்தரவை கடுமையாக அமல்படுத்த போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டனர். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி, காரணம் இல்லாமல் சாலையில் சுற்றித்திரிந்த 81 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 40 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×