என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அங்கன்வாடி பெண் பணியாளருக்கு கத்திக்குத்து - அண்ணன் மீது கொலை முயற்சி வழக்கு

    கிருஷ்ணகிரி அருகே அங்கன்வாடி பெண் பணியாளருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக அவருடைய அண்ணன் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியை அடுத்த பெரியகுந்தாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 50). கணவரை இழந்த இவர், அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு குழந்தைகள் இல்லை. இந்தநிலையில் இவர் குடியிருக்கும் வீட்டை, தனக்கு எழுதி கொடுக்குமாறு இவரது அண்ணன் கோவிந்தன் (55) என்பவர் நீண்ட நாட்களாக கேட்டு தகராறு செய்து வந்தார்.

    இதேபோல் நேற்று முன்தினம் இரவு மீண்டும் வீட்டை தனது பெயருக்கு எழுதி கொடுக்கும்படி அவர், லட்சுமியிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கோவிந்தன், தனது தங்கையின் கை மற்றும் முதுகில் கத்தியால் குத்தினார். இதில் லட்சுமி படுகாயம் அடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கத்திக்குத்து குறித்து லட்சுமி குருபரப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள கோவிந்தனை தேடி வருகிறார்.
    Next Story
    ×