என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊட்டி, குன்னூரில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்
Byமாலை மலர்29 Aug 2020 10:45 AM GMT (Updated: 29 Aug 2020 10:45 AM GMT)
ஊட்டி, குன்னூரில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஊட்டி:
ஊட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கனாகம்பை முதல் மதுரை வீரன் காலனி வரை ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதித் திட்டத்தின் கீழ் ரூ.43.97 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சாலை, தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கப்பச்சி முதல் மதுரை வீரன் காலனி வரை ரூ.89.40 லட்சம் செலவில் நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணி, தீனட்டியில் ரூ.22.95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மன்றகுறிச்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் செலவில் தடுப்பணை கட்டும் பணி, மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.10.50 லட்சம் மதிப்பில் மசக்கல் முதல் மன்றகுறிச்சி வரை அமைக்கப்பட்ட சாலை, ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.26.68 லட்சம் செலவில் பாக்கியா நகர் பகுதியில் நடந்து வரும் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா, செயற்பொறியாளர் சுஜாதா, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எடப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட இளித்தொரையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடம், ஆரக் கொம்பை கிராமத்தில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.7.40 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, ஆர்க்கொம்பை முதல் சித்தகிரி வரை ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.77 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் சாலை, பேரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேரட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட குடிநீர் கிணறு, உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட வெலிங்டன் பிரிவு சாலை முதல் உபதலை வரை 14-வது மத்திய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.33.62 லட்சம் செலவில் போடப்பட்ட சாலை ஆகியவற்றை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X