என் மலர்
செய்திகள்

கைது
காஞ்சிபுரம் அருகே மணல் கடத்திய 4 பேர் கைது
காஞ்சிபுரம் அருகே மணல் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த புஞ்சையரசந்தாங்கல் ஜங்சன் பகுதியில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார். அப்போது மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியது தெரிய வந்தது. அதையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கத்தை சேர்ந்த ராஜா (வயது 30), ஜெகன் (35), சுரேஷ் (33), பார்த்திபன் (44) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Next Story






