என் மலர்
செய்திகள்

மருத்துவ முகாம்
வேப்பனப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்
வேப்பனப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மாதையன் வரவேற்றார். முகாமில் கொரோனா விழிப்புணர்வு குறித்தும், டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து பொதுமக்களிடம் விளக்கி கூறினர். முகாமில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
மேலும் பொதுமக்களுக்கு கண், மூக்கு, தொண்டை பரிசோதனை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் சுகாதார மேற்பார்வையாளர் ஜெயசீலன், சுகாதார ஆய்வாளர்கள் இக்பால் பாஷா, சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






