search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரே நாளில் ரூ.8 கோடிக்கு மது விற்பனை

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் முழு ஊரடங்கையொட்டி ஒரேநாளில் ரூ.8 கோடியே 8 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் டாஸ்மாக் வசதிக்காக வேலூர், அரக்கோணம் ஆகிய 2 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. வேலூர் கோட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களும், அரக்கோணம் கோட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டமும் அடங்கி உள்ளன. வேலூர் கோட்டத்தில் 110 டாஸ்மாக் கடைகள் உள்ளது. அரக்கோணம் கோட்டத்தில் 88 டாஸ்மாக் கடைகள் உள்ளன.

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக கடந்த மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 8-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன.

    இதையொட்டி நேற்று முன்தினம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குடிமகன்கள் தங்களுக்கு விருப்பமான மதுபானங்களை உற்சாகத்துடன் வாங்கி சென்றனர். இதன்காரணமாக வேலூர் டாஸ்மாக் கோட்டத்தில் வழக்கமாக விற்பனையாகும் மதுபானங்களை விட ரூ.2 கோடிக்கு மதுபானங்கள் அதிகமாக விற்பனையானது.

    நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் ரூ.4 கோடியே 95 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகின. வழக்கமாக மற்ற நாட்களில் ரூ.2¾ முதல் ரூ.3 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகும். அரக்கோணம் டாஸ்மாக் கோட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.3 கோடியே 13 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது.

    இதன் மூலம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ரூ.8 கோடியே 8 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×