search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
    X
    சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

    ஊரடங்கு காலத்தில் 131 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்- அதிகாரிகள் தகவல்

    கொரோனா ஊரடங்கு காலத்தில் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 131 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் சிறுமிகள் திருமணத்தை குறைக்க சமூக நலத்துறை அதிகாரிகள், சைல்டுலைன் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் பள்ளி, கல்லூரிகளில் குழந்தை திருமணம் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் சிறுமிகள் திருமணம் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன.

    கொரோனா ஊரடங்கு காலமாக கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 131 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பாத பெண்ணிற்கு திருமண ஏற்பாடு செய்யும் பெற்றோர் மீது வழக்குப்பதிந்து கைது செய்யப்படுவார்கள். மேலும் திருமண ஏற்பாடு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூகநலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×