என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    முன்விரோதத்தில் தொழிலாளியை தாக்கியவர் கைது

    வேதாரண்யத்தில் முன்விரோத தகராறில் தொழிலாளியை கம்பால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் கடினல்வயல் கிராமத்தில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தில் பணி நடைபெற்று கொண்டிருந்தது. இந்த பணிக்கு வந்த சத்தீஷ்பாபு (வயது 43) என்பவர் மற்ற தொழிலாளர்களுக்கு குடிநீர் வழங்கி கொண்டிருந்தார். இந்தநிலையில் அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த குமார் (42) என்பவர் முன்விரோதத்தில் சத்தீஷ்பாபுவை தரக்குறைவாக பேசி கம்பால் தாக்கினார்.

    இதுகுறித்து சத்தீஷ்பாபு கொடுத்த புகாரின்பேரில் வேதாரண்யம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.
    Next Story
    ×